Tuesday 10 May 2011

இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடு இன்றும் அன்றும்

இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடு இன்றும் அன்றும்------------------------------------------------------------------------------------------------------------------
அன்று: இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடு என்பது சஹபாக்கள் முதல் இமாம்கள் காலம் வரை அதன் பிறகும் இருக்கத்தான் செய்தது. இந்த கருத்து வேறுபாடுகள் அவர்களின் அறிவுதர வேறுபாட்டலும் அவர்கள் அடைந்து கொண்ட கருத்தின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும்.
இப்படியான சுழலில் அவர்கள் கடைபிடித்த முறைகள் மிகவும் பயனுள்ளது நமக்கு படிப்பினை தரக்கூடியது.
அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை பின்பற்றி வந்தனர்
மற்ற கருத்துடையவர்களை வசைபாடி திரியவில்லை.
தாங்கள் மட்டும் தான் வஹியின் வெளிச்சத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் வழிகேடர்கள் என்று யாரும் யாரையிம் அழைத்துக் கொள்ளவில்லை.
மாற்று கருத்துடையவரிடம் விவாத அழைப்பு கொடுத்து அவர்கள் யார் உண்மையாளர்கள் என்பதை அறிய விவாதங்கள் நடத்த வில்லை.
அவர்களுக்கு தெரியும் ஹலால் தெளிவானதே ஹராம் தெளிவானதே  இவை இரண்டுக்கும் மத்தியில் இருப்பதில் கருத்து வேறுபாடுகள் வருவது இயற்க்கையே.
எனவே அவர்கள் தங்களுக்கு கிடைத்த வழிகாட்டல் அடிப்படையில் தங்கள் செயல்களை அவர்களுக்கு கிடைத்த ஆதராங்கள் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்கள்.
அவர்கள் தெளிவான கட்டளைக்கு மத்தியில் தெளிவில்லாத விசயங்களை குளப்பிக் கொள்ளவில்லை.
தெளிவான கட்டளைக்கு முன் தெளிவில்லாத விசயங்களை கொண்டு வழி நடந்தது இல்லை.
அவர்கள் கருத்து வேறுபாடுகள் மத்தியில் தகவல் பரிமாற்றம் அடிப்பiயில் இணங்கிக் கொண்டனர்
இல்லையேல் அவர் அவர் செயல்களில் இணக்கம் கண்டனர்.
கருத்து வேறுபாhடுகள் விசயத்தில் அவர்களின் நிலைபாடாக கீழ் காண்பவை காண்கிறோம்,
----------------------------------------------------------------------------------------------------------------------
எங்களுக்கு கிடைத்த தகவல் மற்றும் நாங்கள் விளங்கிக் கொண்ட விதம் எங்களுக்கு சரியானதே, அல்லாஹ்விடத்தில் பிழையானதாகவும் இருக்கலாம்.
அவர்களுக்கு கிடைத்த தகவல் மற்றும் அவர்கள் விளங்கிக் கொண்ட விதம் அவர்களுக்கு சரியானதே, அல்லாஹ்விடத்தில் பிழையானதாகவும் இருக்கலாம். 4:59   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ  ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
இன்று
இஸ்லாமிய மார்க்கத்தில் கருத்து வேறுபாடுகள் அவர்களின் அறிவுதர வேறுபாட்டலும்,அவர்கள் அடைந்து கொண்ட கருத்தின் அடிப்படையில் ஏற்ப்படுவதாகும்.
இப்படியான சுழலில் நாம் கடைபிடித்த முறைகள் மிகவும் பயங்கரமானது நமக்கு அழிவை தரக்கூடியது.
நாம் இப்போது ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை பின்பற்றி வந்தாலும் மற்ற கருத்துடையவர்களை வசைபாடி திரிகிறோம். தாங்கள் மட்டும் தான் வஹியின் வெளிச்சத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் வழிகேடர்கள் என்று குழப்பவாதிகள் ஏமாற்று பேர்வழிகள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.
மாற்று கருத்துடையவரிடம் விவாத அழைப்பு கொடுத்து யார் வஹியின் வெளிச்சத்தில் உள்ளவர்கள் என்பதை அறிய விவாதங்கள் நடத்து கிறோம். விவாத அழைப்பை ஏற்க்கவில்லையென்றால் அவர் ஓடிவிட்டர் என்றும் கீழ்தரமாகவும் விமர்ச்சிக்கிறோம் ஒருவரை ஒருவர் தாக்கி இரத்தத்தை ஓட்டுகிறோம் ஈமானிய சகோதரத்துவம் மறந்து. இயற்க்கை தன்மைக்கு மாற்றமாக தெளிவை தேடி அழைகிறோம். தெளிவான கட்டளைகள் இருக்க அதை பின்பற்றமல் அதற்க்கு மாற்றமான தெளிவில்லாத விசயங்களை கொண்டு தெளிவான கட்டளை புறக்கணிக்கிறோம், இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
எங்களுக்கு கிடைத்த தகவல் மற்றும் நாங்கள் விளங்கிக் கொண்ட விதம் தான் அல்லாஹ்வின் வஹி என்கிறார்கள் சிலர்.
3:102   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும்,(அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

3:105   وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ ۚ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு,மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

8:46 وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
 எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை
வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள். (புகாரி)

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்,
 அல்லாஹ்வின் கரங்கள் கூட்டமைப்புடனேயே இருக்கும் யார் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுகிறாரோ அவர் தன்னை நரக நெருப்புக்குத் தனிமைப்படுத்திக் கொண்டவராவர் (திர்மதி)

61:4 إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَّرْصُوصٌ
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.

4:59   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ  ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

No comments:

Post a Comment